முகக் கவசங்களை அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, முகக் கவசங்களை அணியாதவர்களை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கை கிரிபத்கொடை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாட்டை பொலன்னறுவை, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.