கொரோனா பரவலினால் அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தண்ணீர் உள்ளிட்ட திரவங்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பஸ்களில் விற்பனையில் ஈடுபடுவோர் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து போக்குவரத்து அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ரயில்வே திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்களுக்குள் விற்பனை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளாந்தம் பஸ்களுக்குள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களினால் கொரோனா பரவக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் பஸ்களுக்குள் விற்பனை நடவடிக்கைளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு பாதுகாப்பு தரப்பினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.