சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதறகு முன் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மண்டியிட்டு 'பிளாக் லிவ்ஸ் மேட்டர்' இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் மே.தீவுகள் வீரர்கள், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் இருவர், இரண்டு நடுவர்கள் என அனைவரும் 'பிளாக் லிவ்ஸ் மேட்டர்' இயக்கத்திற்கு மண்டியிட்டு நின்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், இரண்டு அணி வீரர்களும் 'Black Lives Matter' லோகா பொறித்த டி-சர்ட் உடன் விளையாடுகின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.