தானும் தனது தந்தையும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக நடிகர் விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்கள் சிலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் விஷாலும், அவரது தந்தையும் கரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தானும் தனது தந்தையும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக நடிகர் விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆம். அது உண்மைதான். எனது தந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு அருகே இருந்து உதவிகள் செய்ததால் எனக்கும் அதிக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது.
மூவரும் ஆயுர்வேத மருதத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதால், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டோம். தற்போது நலமாக உள்ளோம். மேலும் இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.