(இராஜதுரை ஹஷான்)

 புதிய  அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு  வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை  இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. என்பதற்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிய அரசாங்கத்தில்  அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 

 இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அரசியலமைப்பின் 13வது திருத்தம் இலங்கை- இந்நிய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டு வரப்பட்டது. இடம் பெற்று முடிந்த மாகாண சபை தேர்தலில்  வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தங்களின் அரசியல் பிரநிதிகளை ஜனநாயக முறைப்படி தெரிவு செய்துக் கொண்டார்கள்.

  புதிய அரசாங்கத்தில்  அரசியலமைப்பின் 13வது திருத்தம் நீக்கப்பட்டு மாகாண சபை முறைமையை நீக்குவதாக   ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது சாத்தியமற்ற செயற்பாடாகும் 13ஆவது திருத்தம் இரு நாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறந்து விட முடியாது. மாகாண சபை முறைமையின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு ஒரளவனும் தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது. என்பதை ஏற்றுக் கொள்ள  வேண்டும்.

    பொதுத்தேர்தல் இடம் பெற்றதை தொடர்ந்து பழைய  தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். வடக்க மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரம்  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய பகிர்ந்தளிக்கப்படும்.

  மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என்பதற்காக மாகாண சபையின் அதிகாரங்கள் நிறைவேற்றுத்துறையின் பிரதிநிதியிடம் தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. 

 அப்பிரதேசங்களில் மக்களின் பிரநிதிநிதிகள் அதிகாரத்தில் இல்லை. என்பது   தொடர்ந்து நீடிக்க முடியாது. ஆகவே  மாகாண சபை தேர்தல் முறைமை ஒருபோதும் இரத்து செய்யப்பட இடமளிக்க முடியாது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.