நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம்

www.paewai.com
By -
0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலை  அல்லது இரவு வேளையில் மழை  அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர்  அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)