தொழில்நுட்பக் குழு ஒரு மாதத்துக்கு மேல் கூடாமை பாரதூரமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது அலையின்பாரதூரத் தன்மை தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்திருந்தோம். அதனை தடுப்பது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் உள்ள ஆபத்து தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம் விமான நிலையத்தை திறப்பது தொடர்பிலான ஆபத்து தொடர்பில் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல் அரங்கு பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். 

ஆனால் இவற்றை தெரிவித்த போதிலும் இது தொடர்பிலான தொழில்நுட்ப தீர்மானங்களை எடுக்கவேண்டிய தொழில்நுட்பக் குழு ஒன்றரை மாதங்களாக கூடவில்லை. இறுதியில் இதனை கூட்டுவதை தாமதிக்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தோம். 

6 ஆம் திகதி இதனை அனுப்பியிருந்தோம். அதனுடனேயெ இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌிவர ஆரம்பித்தது. நாம் அறிவித்ததன் பின்னர் கடந்த சனிக்கிழமை குழுவை கூட்டியுள்ளனர். குழு செயற்படாததை நாம் ஒரு குறைப்பாடாக காண்கின்றோம்

என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடே இது.

ஏப்ரல், மே மாதம் கலந்துரையாடிய விடயங்களை விட முழுமையாக மாறுபட்ட நிலையே உள்ளது. அதனால் நாங்கள் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதால் நோயாளர்களை அடையாளம் கண்டோம். ஆனால் தற்போது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமலேயே நோய்க் காவிகளை அடையாளம் காணவேண்டிய தேவையுள்ளது. நாங்கள் நோயாளர்கள் சந்தித்த ஏனையவர்களை அல்லது நோய்க்காவிகளை இனங்காணத் தவறினால் பாரியளவில் தொற்று பரவும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடலாம். 

தனிமைப்படுத்தலுடன் பயணக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. கிராமங்களை தனிமைப்படுத்தி பிரச்சினையிலிருந்து மீளுவதா அதற்கும் அப்பால் சென்று முழு மாவட்டத்திற்கும் தாக்கம் செலுத்தும் விதத்தில் செயற்படுவதா என்பது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்க வேண்டும்

என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.