ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முஸ்லிம் சம்மேளனத்தின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், ஸ்ரீ.ல.சு.க. கஹட்டோவிட்ட கிளையின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான தேசமான்ய எம்.கே.எம்.இக்ரமுல்லாஹ் J.P. அவர்கள் நேற்று இரவு (26) காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (27) மாலை கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவர் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக