உலகின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனல் மெஸி, பார்ஸிலோனா கழகத்தில் இருந்து வெளியேறுதவற்கு விரும்புவதாக அக்கழகத்திற்கு  எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக  மெஸிக்கு நெருக்கமான தரப்பினர் சி.என்.என் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பார்ஸிலோனா கால்பந்தாட்டத்தில் இருந்து மெஸி உடனடியாக வெளியேறுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் அந்தக்கழகத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

தற்போது விளையாடிவரும் வீரர்களில் ஆற்றல்களின் அடிப்படையில் உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்டவீரராக லயனல் மெஸி கருதப்படுகின்றார். ஆர்ஜன்டீன நாட்டவரான மெஸி ஸ்பெயினிலுள்ள பார்ஸிலோனா கழகத்தில் பயிற்சிகளுக்காக 2000ம் ஆண்டிலேயே இணைந்துகொண்டு கனிஷ்ட அணிகளில் விளையாடி  2004ம் ஆண்டு முதல் பார்ஸிலோனா கழகத்தின் சிரேஷ்ட அணிக்காக விளையாடிவருகின்றார்.

2017ம் ஆண்டில் மெஸியை 2021ம்ஆண்டு ஜுன் 30ம் திகதிவரை  வரை பார்ஸிலோனா கழகத்தில் தக்கவைக்கும் ஒப்பந்தத்தில் பார்ஸிலோனாவும் மெஸியும் கையொப்பமிட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்திற்கு அமைய அவரது வாராந்த சம்பளத்தின் பெறுமதி 645,000 அமெரிக்க டொலர்கள் எனக்குறிப்பிடப்பட்டது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.