பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் தத்தமது தேசியப் பட்டியல்களுக்காக உறுப்பினர்களை பிரேரிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சமகி ஜனபல வேகய, இலங்கை தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்களை சமர்ப்பித்துள்ளன.
இதேவேளை இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சி தமக்குரிய உறுப்பினரை பிரேரிக்கவில்லை. அபே ஜனபல என்ற கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவது தொடர்பில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது.
கருத்துரையிடுக