அரச ஊடகங்கள் போட்டித்தன்மையுடன் தொடர்ந்தும் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்றைய தினம் (13) தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் மத்தியல் உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இன்று காலை சுப வேளையில் பொல்ஹென்கொடவில் உள்ள வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கு அமைச்சர் விஜயம் செய்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அமைச்சர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார்.

எந்தவொரு அரசாங்கத்திற்கும் கிடைத்திராத மாபெரும் மக்கள் ஆணை சமகால அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் கூறினார். மக்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இதில் வரையறைக்கு அப்பால் செயற்படவேண்டிய கால கட்டம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு சமகால அரசாங்கத்திற்கு உண்டு. இதனால் நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.









(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.