2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் க.பொ.த உயர்தர பரீட்சையை ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறையை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 23 ஆம் திகதி 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான இறுதி விடுமுறை டிசம்பர் 24 ஆம் திகதி முதல் ஜனவரி 1 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல் 2021 ஆம் புதிய ஆண்டுக்காக கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மேலும், 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என கல்வியமைச்சு அறிவிக்கப்படுள்ளது.

இதன்படி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.