20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சற்று முன் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குறித்த குழுவின் அறிக்கை நாளைய தினம் (16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமரினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.