மல்வானையில் பெரிய ஆடம்பர வீட்டை நிர்மாணித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று முன்தினம் (18) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது பஷில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

வழக்கின் சாட்சியாளரான கட்டட நிர்மாண கலைஞர் முதித் ஜயகொடி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது தரப்பு வாதி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் வழக்கை இன்னொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து சாட்சியமளிக்க வேறு ஒரு தினத்தை வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.