இலங்கையில் இன்றைய தினம் (13) இதுவரை 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3219 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 16 பேர் கட்டாரிலிருந்தும், 4 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தும், இருவர் மாலைதீவில் இருந்தும்,  ஒருவர் எத்தியோப்பியாவில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் எனவும் மற்றுமொருவர் தாய்லாந்தில் இருந்து வருகை தந்த உக்ரைன் நாட்டவர் எனவும் தெரியவருகிறது.

மேலும் மேற்படி அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.