நாட்டில் குரங்குகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அவசியம் என்பதால், தனக்கு “ குரங்கு அமைச்சை” பெற்றுத் தருமாறும், அதனைப் பொறுப்பேற்க தான் தயாராகவிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

 “ பதுளையில் மாத்திரம் குரங்குகளின் பிரச்சினை உள்ளதாக நினைத்து விட வேண்டாம். அவை தற்போது கொழும்புக்கும் வந்துவிட்டன. மத்தேகொட பிரதேசத்தில் அடிக்கடி உலாவுகின்றன. எனவே மத்தேகொடயிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அதிக தூரம் இல்லை. அதனை உரியமுறையில் கட்டுப்படுத்தாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால் குரங்குகள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வர கூடும்" என மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.