பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை, இலங்கை இளைஞன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த சம்பவம் (25) நடந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையிட முற்பட்டவேளை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தன்னிடமிருந்து ஆயுதத்தை வழங்குவதற்கு முன் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட இளைஞன் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய 23 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டு செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி மறைவுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் உட்பட பல இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து லண்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி : தமிழ்வின் மற்றும் சர்வதேச ஊடகங்கள்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.