மதுரங்குளி மீடியாவின் சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம்  வழங்கும் நிகழ்வு 18/09/2020 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மதுரங்குளி தொடுவா  வீதியில் அமைந்திருக்கும் ட்ரீம் மண்டபத்தில் பு/ நல்லாந்தழுவை மு.ஆ. பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

MRN & SONS , அக்கரைப்பற்று உதவி மையம், மற்றும் தைபா நிறுவனம் ஆகியோரின் அனுசரணையில் ரமழான் மாதத்தில் நடைபெற்ற  இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சுமார் 200 போட்டியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வட மேல் மாகாணசபை  உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன புத்தளம் தொகுதி அமைப்பாளரும், கல்பிட்டி முந்தல் அபிவிருத்திக் குழு உப தலைவரும், புத்தளம் மாவட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இனைப்பாளருமான கௌரவ ஏ.எச்.எம். ரியாஸ் அவர்களும், மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான கே.எம்.எம். பைஸர், ஏ.ஆர்.எம்.ஜெஸீம் ரஹ்மான் ஆகியோர்  கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்தனர்.











கருத்துரையிடுக

Blogger இயக்குவது.