பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மத் சாத் கட்டாக், நீதி அமைச்சர் அலி சப்ரியை, அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் (21) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், புதிதாக நியமனம் பெற்ற நீதி அமைச்சருக்கும் , புதிய அரசாங்கத்துக்கும் உயர்ஸ்தானிகர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், நீண்ட காலமாக இரு நாடுகளும் பேணிவரும் வலுவான இருதரப்பு உறவினையும் பாராட்டியுள்ளார்.
இச்சந்திப்பில், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், பரஸ்பர ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கருத்துரையிடுக