(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நாட்டு மக்கள் எவரும் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம். ஒரு  இனத்தை இலக்காகக் கொண்டு 20வது திருத்தம் கொண்டுவரப்படவில்லை. பல்லின மக்களின் அரசியல் அபிலாசைகளையும் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல்ராஜபக்ஷதெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் நாட்டுக்காக உருவாக்கப்பட்டதல்ல, அரசாங்கத்தின் தேவைக்காக அவசர அவசரமாக  இயற்றப்பட்டது. இதன்  பயனை மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை. முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெற்றன. நாட்டுக்கு பொருந்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு, புதிய  அரசியலமைப்பு உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு இதன் காரணமாகவே அரசியலைமப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. வர்த்தமானியில்  வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 20வது  திருத்த  சட்ட வரைபை யார் தயாரித்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கான அவசியம் ஏதும் கிடையாது. நாட்டு மக்கள் எவரும் 20வது திருத்தத்துக்கு எதிரான நீதிமன்றில் மனுத்தாககல் செய்யலாம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.