கடந்த சனிக்கிழமை இந்தியாவின் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கான்ஸ்டபிளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இந்தியாவின் தனுஸ்கோடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த தினம் சபுகஸ்கந்த பகுதியில் 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.




Adaderana 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.