பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளளார்.

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது. பெயர்களை வெளியிடவில்லை என்றாலும் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூரோ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிஎஸ்ஜி அணி பிரெஞ்ச் லீக்கில் அவர்களுடைய 2-வது போட்டியை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 29-ம் திகதி நடைபெற இருந்தது ஒக்டோபர் 10-ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. 

நெய்மர் விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.