நேற்றைய தினம் (14) பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, கங்காராம விகாரையில் ஆசிர்வாதம் பெற்றார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் டிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருக்கிறேன்.

தான் கட்சிக்காக செய்ய ​வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும் நாட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்வேன்.

கட்சியின் அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்து எதிர்கால பயணத்தை ஆரம்பிக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் சிலருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்களும் கட்சியின் மீது கொண்டுள்ள நேசத்தினால் அவர்களுடன் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.