உயிருக்கு பயந்து காணொளி காட்சியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் அறிக்கை தொடர்பான செய்தியை தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக கூறும் சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தின் மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.