sumanthiran
20வது திருத்தத்தினை முழுமையாக எதிர்ப்பது என்ற தீர்மானத்தில் தாம் உறுதியாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். 

மேலும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 20 இனை எதிர்ப்பதற்கான கூட்டு செயற்பாடுகளுக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 21, 22 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் 20 தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.