நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதிபதி மொஹமட் மிஹைர் பிறப்பித்துள்ளார்.

2018 ஒக்டோபர் 28 இல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான வழக்கில், முன்னாள் கொழும்பு  மாநகரசபை ஆணையாளர், குலதிஸ்ஸா கீக்கியானகே உள்ளிட்ட பத்து பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, வழக்கின் முதல் சாட்சியாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரனதுங்கா நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவியதையடுத்து  கொழும்பு தலைமை நீதவான் அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கு டிசம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 34 வயது நபர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(வீரகேசரி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.