Update - 7.00 PM
திவுலபிடிய கொத்தணி மூலம் புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 26 பேர் சமூக மட்டத்தில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த கொத்தணி மூலம் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2075 ஆக உயர்வடைந்துள்ளது.
(இன்றைய தினம் மொத்தமாக 61 பேர் - திவுலபிடிய கொத்தணி)
முந்திய செய்தி
இன்றைய தினம் (18) திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் இதுவரை 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
இதுவரை குறித்த கொத்தணி மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2036 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துரையிடுக