நேற்றைய தினம் (08) இலங்கையில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர் எனவும், 18 பேர் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் அருகில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
ஏனைய 10 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்று தெரிவக்கப்படுகிறது.
இதனால் திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1053 ஆகவும் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4488 ஆகவும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக