இலங்கையில் திவுலபிடிய கொத்தணியில் புதிதாக 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 37 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 83 பேர் சமூக மட்டத்தில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே இன்றைய தினம் (20) இதுவரை 180 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், திவுலபிடிய கொத்தணியில் இதுவரை, 2342 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.