கஞ்சா பயிரிடுவதன் மூலம் 2025 இற்குள் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கஞ்சா செடி பயிர்ச்செய்கை செய்து, அதனை மருத்துவ நுகர்வுக்கு உள்நாட்டு பாவனைக்கு பதிலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகளவு அந்நிய செலாவணியினை ஈட்ட முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், எமது நாட்டின் வெளிநாட்டுக் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என நான் எப்போதும் எண்ணி ஆச்சரியப்படுவது உண்டு. நாங்கள் இதனை செய்தால், 2025 இற்குள் எங்கள் கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியும் என நான் நம்புகிறேன்.
குறித்த கஞ்சா வளர்ப்பு செயற்பாட்டினை இராணுவம் மற்றும் STF உதவியுடன் வளர்த்து பாதுகாக்க முடியும். இதனால் ஒரு செடிக் கூட வெளியே செல்லாது. பின்னர் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் மருந்துகளை பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கலாம்” என்று அமைச்சர் கூறினார்.
ගංජා වවලා රටේ ණය ඉවරකරන්න පුලුවන්
Posted by Neth FM on Friday, October 2, 2020