மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் உணவகமொன்றை பராமரித்துச் சென்ற நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு அவரின் மகனின் மூலமாக கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் உணவகம் ஒன்றை பராமரித்துச் செல்லும் நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தின் அனைத்து அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் பணிகள் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் சுமார் 85 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.