குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரிக்கு சட்டமா அதிபரினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேற்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு நாளைய தினம் (12) விசாரணை அறிக்கைகளுடன் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச தரப்பு சட்டத்தரணி நிஷார் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.