திவுலபிடிய கொரோனா வைரஸ் கொத்தணி மூலம் நேற்றைய தினம் 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தில் இருப்பவர்கள் எனவும் 46 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1789 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5244 ஆக உயர்வடைந்துள்ளது. 

மேலும் தற்போதைய நிலையில் 1851 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.