Updated - 7.25 PM

திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் இன்றைய தினம் (17 இதுவரை 115 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 91 பேர் சமூகத்திலிருந்தும் 24 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இதுவரை திவுலபிடிய கொத்தணி மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வடைந்துள்ளது



முன்னைய பதிவு

திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் இன்றைய தினம் (17) இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 02 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 71 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே திவுலபிடிய கொத்தணி மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1972 ஆக உயர்வடைந்துள்ள அதேவேளை இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5427 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் தற்போது 2019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.