Updated : 

கம்பஹா மாவட்டத்தில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ள அறிவிப்பினை தொடர்ந்து 04 பொலிஸ் பிரிவுகளுக்கு மட்டும் (மினுவாங்கொட, கம்பஹா, திவுலபிடிய, வெயாங்கொட) என்று தெரிவித்துள்ளது.


இன்று (06) மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை. கம்பஹா மாவட்டத்தின் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பஹா, கிரிந்திவெல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வதுகிரிபிடிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல மற்றும்  யக்கல பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

மேலும், ஏற்கனவே சென்ற ஞாயிறு முதல் திவுலபிடிய, மினுவாங்கொட மற்றும் வெயாங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.