களுத்துறை மாவட்டம், மதுகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஓவிடிகல, பதுகம, பதுகம நவ ஜனபதய ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனையடுத்தே குறித்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் தர பரீட்சை மாணவர்களுக்கு மாத்திரம் பரீட்சை நடவடிக்கைகளுக்காக பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக