ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.முஹம்மது நிகார் வாக்கெடுப்பின்றி, ஏகமானதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் தலைமையில் இன்று  (17) காலை நடைபெற்றது. 

கடந்த 28 மாதங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு உறுப்பினர்கள் தவிசாளராக இருந்துள்ளனர். இவர்களில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள முகம்மது  நிகார் முதல் ஆறு மாதங்கள் தவிசாளராக இருந்து, இராஜினமா செய்ததையடுத்து, அப்போது அதே கட்சியைச் சேர்ந்த எம்.எச்.சைபுதீன் (சனுஸ்) தவிசாளரானார். 

இந்த நிலையில், கடந்த 22  மாதங்களாக  தவிசாளர் பதவியை வகித்துவந்த சனுஸ், அண்மையில்  இராஜினாமா செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.