இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 21 வது மரணம் நிகழ்ந்துள்ளது.

கம்பஹா மாவட்டம், மஹர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரே மரணமடைந்துள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக கடந்த 23 ஆம் திகதி வெலிசர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்றைய தினம் (31) மரணமடைந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை இறந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.