தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலகங்களின் கீழ் உள்ள மாவட்ட தொழில் கேந்திர மையங்களில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மற்றும் தொழில் பாதுகாப்புத் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக dome.gov.lk என்ற இணையதள முகவரியின் கீழ் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த இணையத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு காணப்படுகிறது. இந்த இணையத்தளத்திற்கு மேலதிகமாக மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களின் தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேவை இருப்பவர்கள் அதன் மூலம் தொடர்பு கொண்டால், உங்களது விபரங்களை பதிவு செய்வதற்கான நாள் ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். அந்நாளில் உங்களுடைய மாவட்ட தொழில் கேந்திர நிலையத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.