நேற்றைய தினம் (29) கொழும்பில் பெய்த கடுமையான மழை காரணமாக, 50 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 03, கொள்ளுபிட்டி - டுப்லிகேசன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் பணியாற்றி வந்த இவர், குறித்த கட்டடத்தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என்று கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை கீழ்தளம் நீரில் மூழ்கிபோது, அங்கு நித்திரையிலிருந்த பலரும் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே குறித்த நபர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக