இன்றைய தினம் (09) இரு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த மரணங்களில் நேற்றைய தினம் மரணித்த 20 நாட்களே பூர்த்தியான குழந்தையும், இன்றைய தினம் முல்லேரியா ஆதார வைத்தியாலையில் மரணித்த கொழும்பு 10 இனை சேர்ந்த 62 வயதுடையவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.