(நூருல் ஹுதா உமர்)

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரெ நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்று (10) இரவு முல்லேரியா ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.

முல்லேரியா ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது இவர் உயிரிழந்த நிலையில், அவர் மரணமடைந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உடலை கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டபோதும் அந்த வைத்தியசாலைகள் உடலை ஏற்றுக் கொள்ளாமை காரணமாக மீண்டும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கே கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, இந்த கொவிட் மரணம் தொடர்பில் சுகாதாரத்துறையினருக்கும் பிராந்திய சுகாதாரப் பிரிவினருக்கும் நாம் அறிவித்துள்ளோம். எனவே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.