கலேவல, பெல்மதுல்லை, தர்கா நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மரணங்கள் பதிவானதையடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 200 இனை தாண்டியது!

Rihmy Hakeem
By -
0

 இலங்கையில் இன்று (31) ஐந்து கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையொடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று பதிவான மரணங்களின் விபரம்:

  1. தர்கா நகரை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் களுத்துறை பெரிய வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி மரணித்துள்ளார்.
  2. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர் இன்று ஐடிஎச் இல் (31) மரணித்துள்ளார்
  3. கொழும்பு 05 இனை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் ஐடிஎச் இல் (31) மரணித்துள்ளார்.
  4. கலேவல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் கலேவல வைத்தியசாலையில் (30) மரணித்துள்ளார்.
  5. பெல்மதுல்லை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் (30) மரணித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)