இலங்கையில் இன்று (31) ஐந்து கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையொடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று பதிவான மரணங்களின் விபரம்:
- தர்கா நகரை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் களுத்துறை பெரிய வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி மரணித்துள்ளார்.
- ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர் இன்று ஐடிஎச் இல் (31) மரணித்துள்ளார்
- கொழும்பு 05 இனை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் ஐடிஎச் இல் (31) மரணித்துள்ளார்.
- கலேவல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் கலேவல வைத்தியசாலையில் (30) மரணித்துள்ளார்.
- பெல்மதுல்லை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் (30) மரணித்துள்ளார்.
கருத்துரையிடுக