p> 


கடந்த மூன்று வாரங்களில் பேருவளை சுகாதார வைத்திய பிரிவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பேருவளை பிரிவுக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

பேருவளை சுகாதார வைத்திய பிரிவில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 168 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தர்கா நகர் பகுதியில் 58 பேரும்,  பேருவளையில் 20 பேரும்,  பயாகல,  மருதானை, மஹகொடை ஆகிய  பகுதிகளில் தலா 20 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.