கொவிட் பாதிப்புடன் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அமரபுர மற்றும் ராமன்ய நிக்காயாக்களின் சர்வ மத உறவுகளுக்கான துணைக்குழு ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த நிக்காயாக்கள் மூலமான விசேட கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமரபுர மற்றும் ராமன்ய நிக்காயாக்களில் 21,000 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

மேலும் குறித்த கடிதத்தில் நிக்காயாக்களின் பதிவாளர்கள் உட்பட இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார்களின் கையொப்பங்களும் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.