இன்றைய தினம் (14) இரு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளது.
- பண்டாரகமை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
- கொழும்பு 14 இனை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் (13) தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் இதுவரை 685 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக