மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (02) இதுவரை 878 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 21,861 ஆக உயர்வடைந்துள்ளதோடு மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 25,410 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் தற்போது 6,982 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.