நாட்டில் இன்று (15) நான்கு கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்வடைந்துள்ளது.

விபரம்:

கிரிபத்கொடை பிரதேசத்தை சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர் இன்று ஐடிஎச் வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.

கொழும்பு 10 இனை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் இன்று ஹோமாகமை வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் இரனவிலை சிகிச்சை நிலையத்தில் கடந்த 13 ஆம் திகதி மரணித்துள்ளார்.

கொழும்பு 15 இனை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.