கண்டி நகர் உட்பட ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.



அதனடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கண்டி நகரில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மேலதிக வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Adaderana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.