எரியுண்ட காரிலிருந்து 33 வயதான வர்த்தகரின் சடலம் மீட்பு! (வீடியோ)

Rihmy Hakeem
By -
0


 கொஹுவல, ஆசிரி மாவத்தையில் எரியுண்ட காரில் இருந்து 33 வயதான வர்த்தகரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

களுபோவில, ஹாதியா மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)